Tuesday, 11 May 2021

தொடர்ச்சியாக உறங்கும் 17 வயதுச் சிறுமி : முடிவு தெரியாமல் தவிக்கும் பெற்றோர்!!

தொடர்ச்சியாக உறங்கும் 17 வயதுச் சிறுமி : முடிவு தெரியாமல் தவிக்கும் பெற்றோர்!!
இந்தோனேஷியாவில் சிறுமி ஒருவர் மிகவும் அரிதிலும், அரிதான நோயால் பா.திக்கப்பட்டு தொடர்ந்து பல நாட்கள் தூங்கி வருவது பெற்றோரிடையே மிகுந்த வே.தனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் Banjarmasin பகுதியைச் சேர்ந்த Siti Raisa Miranda என்ற 17 வயது சி.றுமி கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூ.ங்கிய போது, அதன் பின் 13 நாட்கள் தூங்கினார். இதனால் கடும் அ.திர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இது Kleine-Levin நோயின் அறிகுறி, இது ஒரு மில்லியன் மக்களில் ஒருவரை பாதிக்கும், மிகவும் அரிதிலும், அரிதான நோய் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும், எந்த ஒரு பலனும் இல்லை. இப்படி சிறுமி தொடர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவர் தூங்குகிறாரா? இல்லையா? என்பதை அறிய முடியாமல், பெற்றோர் அவரை உடனடியாக அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து, பத்து நாட்களுக்கு மேல் வைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.


சிறுமியின் பெற்றோர், அவள் தூங்கும்போதெல்லாம் அவள் நன்றாக இருக்கிறாள் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியவில்லை, இதன் காரணமாகவே நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறோம்.


அவர் இது போன்ற நிலையில் இருக்கும் போது, நாங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இது போன்ற சமயங்களில் எங்களுக்கு மருத்துவமனையின் உதவி தேவை, மகளின் உடல்நிலை குறித்து பரிசோதித்து பார்த்தால், அவள் நன்றாக இருக்கிறாள் என்று வரும், ஆனால் அந்த தூக்கம் தான் என்று வேதனையுடன் கூறினர்.


Kleine-Levin-க்கு இதுவரை எந்த ஒரு சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சிறுமி தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதால், இவரைக் கண்ட இணையவாசிகள், விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும், நிஜ வாழ்க்கையில் ஒரு Sleeping Beauty என்று கூறி வருகின்றனர்.



Wednesday, 14 April 2021

சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு: சங்க இலக்கியங்கள் கூறும் திடமான சான்றுகள்!

சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு: சங்க இலக்கியங்கள் கூறும் திடமான சான்றுகள்!



சித்திரை மதத்தின் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர்.
மேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதினர் என்பதற்கு சங்க இலக்கியங்களிலேயே சான்று உள்ளது. சங்க இலக்கியங்களின் பதினென்மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் 160–161:

திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக,

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,

இதற்கு நச்சினார்க்கினியரின் உரை

திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே…


அதாவது, மேஷ ராசி தொடங்கி மற்ற ராசிகளில் சென்று திரியும் சூரியன் என்று உரையெழுதுகிறார். ஆகவே மேஷ ராசியே முதல் ராசியாக பண்டைய தமிழர்களும் கருதினர் என்று நாம் அறியலாம். மேஷ ராசியில் சூரியன் திரியும் மாதம் சித்திரை, ஆகவே அதுவே அவர்களது முதல் மாதம்.

புறநாநூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கிய நூல்களிலும் இதை உறுதி செய்யும் சான்றுகள் உள்ளன.
ஒரு சிலர் பழங்கால கல்வெட்டு என்று ஒன்றைக் காட்டி அதில் தை மாதமே முதல் மாதமாக குறிப்பிட்டிருப்பதாகவும் ஆதலால் பண்டையத் தமிழர் தை மாதத்தையே முதல் மாதமாக கொண்டிருந்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.

சரி, அது எவ்வளவு பழமையானது என்பது பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தோமேயானால் அது 300 ஆண்டுகள் பழமையானது என்று ஒரு செய்திக் கட்டுரை சொல்கிறது. மேலும் அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களும் தற்காலத் தமிழ் எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களுமே ஆகும். தமிழி எழுத்துக்களோ, வட்டெழுத்துக்களோ கூட அல்ல. ஆகவே இது முதலில் பழங்கால கல்வெட்டே அல்ல. ஒரு ஒப்பீட்டிற்காகச் சொல்கிறேன், நான் மேலே அளித்துள்ள, மேஷ ராசியை முதல் ராசியாகக் குறிப்பிடும் நெடுநெல்வாடை பாடலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு, அதாவது அப்பாடல் 1800–1900 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கல்வெட்டோ 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது.
சரி, இடைக்காலத்தில் வந்த அந்தக் கல்வெட்டில் தை மாதம் முதல் மாதமாக ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?

முதலில் அந்தக் கல்வெட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றி எனக்கு தெளிவாக விளங்கவில்லை, அந்த செய்திக் கட்டுரை சொல்வதையே நாம் உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியே அதில் தை மாதம் முதல் மாதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். தைத்திங்கள் முதல் நாள் அறுவடைத்திருநாள் என்பது நாம் அறிந்ததே. அன்றிலிருந்து வியாபாரத்தை தொடங்குவதால் தை முதல் நாளை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக தமிழக விவசாயிகளும் வியாபாரிகளும் கொண்டிருக்கலாம். தற்போதும் கூட ஜனவரி 1-ஆம் தேதியை உலகம் முழுவதும் புத்தாண்டாகக் கொண்டாடிலும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக கருதுகிறோம், அது போல் இதுவும் இருக்கலாம். ஏன், தற்போதும் கூட குஜராத்தைச் சேர்ந்த சில தொழில் சார்ந்த சமூகங்கள், மார்வாரிகள் போன்றோர் தீபாவளியை வருடத்தின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்பவர்கள், அவர்களுக்கு தீபாவளி நாளே தொழில் கணக்கு வழக்குகளை தொடங்கும் நாள். அதனால் அவர்கள் இந்துக்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

அப்படியும் "தை ஒன்றே வருடப்பிறப்பு" என்று பிடிவாதம் பிடிப்பவர்களிடம் நான் கேட்கிறேன், தை முதல் நாள் எப்போது வரும் என்று எப்படி கணிப்பீர்? சூரியனின் சுழற்சியை வைத்துத்தானே? சூரியன் மகர ராசியில் நுழையும் நாளை வைத்துத் தானே? ஆகவே பஞ்சாங்கத்தை, நம் பழங்கால வானிலை முறையை வைத்துத் தானே தை முதல் நாளையும் கணிப்பீர்? பழங்கால வானிலை முறையில் மகர ராசி முதல் ராசியா? அது பத்தாம் ராசி அல்லவா? ஆகவே தை மாதம் வருடத்தின் பத்தாம் மாதமாகத் தானே இருக்க முடியும்? மகர ராசியே முதல் ராசி, தை மாதமே முதல் மாதம் என்று குறிப்பிடும் தமிழ் இலக்கியச் சான்று ஏதாவது உள்ளதா? மாறாக "திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக" என்று மேஷ ராசியையே முதல் ராசியாக இரண்டாம் நூற்றாண்டு தமிழ்ச்சங்கப்பாடலான நெடுநெல்வாடை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறதே! மேஷ ராசியே நம் பண்டைய வானிலை முறையின் முதல் ராசி என்றால் சூரியனின் பெயர்ச்சியை வைத்து மாதங்களைக் கணிக்கும் பண்டையத் தமிழர்கள் சூரியன் மேஷராசியில் நுழையும் சித்திரை ஒன்றாம் நாளையே வருடத்தின் தொடக்கமாகக் கொண்டார்கள் என்பது நிரூபணமாகிறது அல்லவா?

ஆக, தை முதல் நாளன்று கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் வேளான் தொழிலை முதன்மையான தொழிலாகக் கொண்ட தமிழ்ச்சமூகத்திற்கு மிகவும் முக்கியமான திருநாள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எவருக்கும் இருக்க முடியாது. அறுவடைத் திருநாள் தொழில் கணக்கு வழக்குகளுக்கான முதல் நாளாக, வர்த்தக வருடத்தின் முதல் நாளாக கருதப்பட்டதற்கான வாய்ப்பு நிச்சயமாக உண்டு. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று தை முதல் நாளை ஒரு புதிய செழுமையான காலத்தை எதிர்நோக்கும் நாளாக இன்றளவும் நாம் கொண்டாடி வருகிறோம்.

அதே சமயம், அந்த தை முதல் நாளையும் கணிக்கும் நம் பண்டைய வானிலை முறைப்படி "வருடம்" என்பது சித்திரை முதல் நாளே தொடங்குகிறது. சிலப்பதிகார காலத்திலிருந்து இன்று வரை தமிழரனைவரும் சித்திரைத் திருநாளை வருடப்பிறப்பாக சிறப்பாகக் கொண்டாடி வருவதும் இதையே பறைசாற்றுகிறது.

அனைவருக்கும் இனிய பிலவ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Saturday, 4 January 2020

சிங்கபெண்ணே அல்ல திருட்டுப் பெண்ணே...! டியோ களவாணிகள்

சென்னையில் இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து இருப்பது போல நடித்து டியோ ஸ்கூட்டரை கள்ளச்சாவி போட்டு களவாட முயன்ற இளம் பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வீட்டிற்கு வெளியே வீதியில் நிறுத்தப்படும் இரு சக்கரவாகனங்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள வில்லங்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...



இரு சக்கர வாகனங்களை திருடும் நம்ம ஊரு புள்ளீங்கோக்களில் சற்று முரண்பட்டது இந்த சிங்க புள்ளீங்கோ...!

திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் தனது டியோ ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு வீதியில் நிறுத்தி விட்டு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஆக்டிவாக வலம் வந்த இரு இளம் பெண்களில் ஒருவர் அவரது வீட்டிற்கு எதிரே இருட்டில் மறைந்து நின்று நோட்டமிட மற்றொருவர் பக்கத்து வீட்டு படிக்கட்டில் அமர்ந்துகொண்டார்.

அக்கம் பக்கம் நோட்டமிட்ட சிங்க புள்ளீங்கோ ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த யாசார் அராபத்தின் ஸ்கூட்டரில் அமர்ந்தபடி கள்ளச்சாவி போட்டு திறக்க முயன்றது.

இந்த காட்சிகளை வீட்டின் சிசிடிவி திரையில் கண்ட யாசர், உஷாராகி வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்தார். அவரை கண்டதும் சிங்க புள்ளீங்கோங்கள் இரண்டும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் விரட்டிச்சென்ற போது அதில் ஒரு பெண் களவாணி மட்டும் சிக்கினாள்.

தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பாள் என்று மக்கள் நினைத்திருக்க, நாங்க பார்க்காத ஜெயிலே இல்ல என்ற ரேஞ்சில் அந்த பெண் கெத்தாக குரல் கொடுத்த காட்சி தான் இது..!

ஒரு வீட்டின் இரும்பு கேட்டிற்குள் சிறைவைக்கப்பட்ட அந்த பெண்ணை அண்ணாசாலை காவல் துறையினர் விரைந்து வந்து அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த பெண் 19 வயது கஞ்சா வியாபாரி சந்தியா என்பதும் அவருடன் வந்தது மோசடி மோனிஷா என்பதும் தெரியவந்தது.

சந்தியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் கள்ளச்சாவியை கையில் கொடுத்து இருசக்கர வாகனத்தை திருடச்சொன்ன மோசடி மோனிஷாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்கள் நுழையாத துறையே இல்லை என்று கலக்கிக் கொண்டிருக்கும் பல சாதனை பெண்களின் மத்தியில், முறையற்ற வளர்ப்பு முறை, கூடா நட்பு போன்றவற்றால் தடம் மாறி குற்றங்களை துணிந்து செய்யும் இது போன்ற சில வேதனை பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Monday, 16 December 2019

வானத்தைத் தொடுமளவு உயரத்துக்கு ராமர் கோவில் கட்டப்படும்! அமித்ஷா சூளுரை

ஜார்கண்ட் மாநில பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அயோத்தியில் வானத்தை தொடும் அளவுக்கு ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.


ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன. எனவே, ஜார்கண்ட்டில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, ‘ராம் ஜென்பூமி வழக்கை ஏன் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று கபில்சிபல் கேட்டார். எதற்காக இந்த வழக்கின் மீது உங்களுக்கு வயிற்றெரிச்சல்? அயோத்தி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பது உலக முழுவதுமுள்ள இந்தியர்களின் 100 ஆண்டு கால கோரிக்கை.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் இதனைச் சொல்ல விரும்பினேன். வானத்தை தொடுமளவு உயரத்துக்கு மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் 4 ஆண்டுகளுக்குள் கட்டப்படும்’ என்று தெரிவித்தார்.


Thursday, 12 December 2019

கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவருக்கு 'டிப்ஸ்' வழங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவருக்கு 'டிப்ஸ்' வழங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு


சென்னை: வீடுகளில் சமையல் காஸ் விநியோகம் செய்பவரிடம் கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இண்டேன் காஸ் சிலிண்டர், தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே, பொதுமக்களுக்கு முகவர்களால் விநியோகம் செய்யப்படுகிறது. காஸ் விநியோகம் செய்யும் போது, முகவர்களால் வழங்கப் படும்ரசீதில் சில்லறை விற்பனை விலைதெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.


வாடிக்கையாளர்கள் சிலிண்டரைப் பெற்றுக் கொண்டபின் ரசீதில்அத்தாட்சி அளிக்கவேண்டும்.மேலும், சில்லறை விற்பனை விலைஎன்பது, வாடிக்கையாளரின் சமையல் அறை வரை சிலிண்டரைடெலிவரி செய்வதற்கான தொகை யாகும்


வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்குமேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கவேண்டாம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 'டிப்ஸ்' வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை.


எனவே ரசீதில் உள்ள சில்லறை விலைக்குமேல் தொகை கோரப்பட்டால், வாடிக்கையாளர் 0422-2247396 என்ற எண்ணில் இண்டேன் சேவை மையத்தை காலை 9.30 முதல் மாலை 5.15 வரை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இதர புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃப்ரீ எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு

 அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 9 December 2019

கவரிமான் என்பது மான் இனம் அல்ல,

கவரிமான் என்பது மான் இனம் அல்ல,
அதன் உண்மையான பெயர் கவரிமா. 
அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. 
இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது,
அதுவும் எருமை மாடு வகையைச் சார்ந்ததாகும். 
இதையே  நமது மக்கள் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.

கவரிமான் எங்கு வசிக்கிறது..? 

முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..?

எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.” 

என்கிறார் திருவள்ளுவர் ( 969ஆம் குறளில் )

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்.

அதே போல மானம் மிக்கவர்கள்,
தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள்
 என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.
ஆனால்
இப்படி ஒரு மான் இருப்பது பற்றி
அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?
குழப்பமாக இருக்கிறது அல்லவா?
அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள்..
அதில் சொல்லப்பட்டு இருப்பது
கவரி மான் அல்ல.
*கவரி மா!
ஆம்.கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது.
அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்.
புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது.
"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்"

இமயமலைப் பகுதியில் ,
கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு,
தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள்.
அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல.

இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு.

கவரிமா என்பது மான் வகையைச் சார்ந்தது அல்ல.
மாடு வகையைச் சார்ந்தது என்பது அடுத்த வியப்பு.
வள்ளுவர் சொன்னது இதைத்தான் 
இந்தக் *கவரி மா குறித்து 

பதிற்றுப் பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.
முடி சடை போல தொங்கக் கூடிய விலங்கு
தான் கவரிமா

இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்.

கவரி என்பதில் இருந்துதான் *சவரி முடி* என்ற இன்றைய சொல் 
உருவானது..
*மா* என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.

சரி.

இந்தக் குறளுக்குப் பொருள் என்ன?

பனிப் பகுதியில் வாழும் கவரிமாவுக்கு ,

அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..

அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ,

மனிதர்களால் வெட்டப்பட்டாலோ,
குளிரினால் இறந்து விடும்..

அதே போல சில மனிதர்கள்.

அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால்,

அவர்கள் வாழ்வது அரியதாகி விடும்…

எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை.

பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை.

ஆனால் *கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தான் தவறு,,

Saturday, 7 December 2019

1971 முதல் பங்களாதேஷை சேர்ந்த இந்துக்கள் பெரும் இன அழிவை எதிர்க்கொண்டனர்.

#CitizenshipAmendmentBill
இந்தியாவில் உள்ள மற்ற நாட்டை சேர்ந்த இந்துக்களுக்கே முதல் உரிமை வழங்கப்படும்.

1971 முதல் பங்களாதேஷை சேர்ந்த இந்துக்கள் பெரும் இன அழிவை எதிர்க்கொண்டனர்.

ஏறத்தாழ 20லட்சம் பேர் கொல்லப்பட்டனர் இந்து என்ற ஒரே காரணத்திற்காக இந்து % 1941ல் வீழ்ச்சி 28 to 8 

திருடர்கள் முன்னேற்ற கழகம் moolapaththiram Parithabangal... sarkariya commission, Netrikan TV,

திருடர்கள் முன்னேற்ற கழகம்  moolapaththiram Parithabangal... sarkariya commission, Netrikan TV,

https://youtu.be/8D24fISNVhY

தலை கீழாக கட்டப்பட்ட கோயில்,

தலை கீழாக கட்டப்பட்ட கோயில், தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான் கோயில்
 கழுகுமலை வெட்டுவான் கோயில் தலை கீழாக கட்டப்பட்ட கோயில் தமிழர்களை தலை நிமிர வைத்த கட்டிடக் கலை... வாருங்கள் வெட்டுவான் கோயில் விபரங்களை முழுமையாக பார்ப்போம்...


கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கழுகு மலையில் ஊரிலிருந்து 1 கிமீ தொலைவில் இருக்கும் மலை மீது குடைவரை கோயில்கால பிரமாண்டமாக காட்சி தருகின்றது.

1200 ஆண்டு பழமை:

இந்த குடைவரை கோயில் திராவிட கட்டிட கோயில் வடிவமைப்பை பயன்படுத்தி சுமார் கிபி 800ல் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


பொதுவாக ஒரு கோயிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்த குடை வரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது.

அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.தலைகீழாக கோயிலை கட்ட மலையை குடைந்து, தமிழர்களின் கட்டிட  திறமையை தலை நிமிரச் செய்துள்ளனர்
.
இந்தியாவில் குடைவரை குகைக் கோயில் என்றது ஞாபகம் வருவது எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் குகைக் கோயில்.

அந்த வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள எல்லோரா என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக மலையை குடைந்து குகை கோயிலை பாண்டிய மன்னர்களால் செதுக்கப்படுள்ளது. 

பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர், பூத கணங்கள் என பல சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல சிலைகள் முழுமைப்பெறாமலும் நிற்கின்றன.

கருவறையில் பிள்ளையார் சிலை வைக்கப்படுள்ளது. ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட மிருதங்க தட்சிணாமூர்த்தி இங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.*

கோயில் அரைகுறையாக நிறுத்தப்பட்டதற்கு பல யூகங்கள் கூறப்படுகின்றன. கோயில் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில், பாறையில் வெடிப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது போரில் மன்னன் இறந்ததால் அப்படியே விடப்பட்டிருக்கலாம் என கருத்து நிலவுகிறது.

தாமரைப் பூ தொங்குவது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான கழுகு மலை மீது ஏறி சற்று எட்டிப்பார்த்தால் மிகவும் கலைநயமிக்க வெட்டுவான் கோயில் தென் படுகிறது.

ஒரே கல்லினால் ஆன கோயில் என்பது தான் சிறப்பு. ஒரு பெரிய மலையை ‘ப’ வடிவில் செதுக்கி அதில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி, கோயிலை மேலிருந்து கீழாக வெட்டி அர்புதமாக உருவாக்கியுள்ளனர்.கழுகு மலை ஊருக்கு ஒரு அடையாளமாக இந்த கோயில் திகழ்கின்றது.

மலையின் மற்றொரு பகுதியில் சமணர்கள் சித்தாந்தம் போதித்த பல்கலைக்கு அடையாளமாக பல பாறைகளின் செதுக்கப்ப்ட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சியாக அமைந்துள்ளன.

இதில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள் 90க்கும் மேற்பட்ட வட்டெழுத்துக்கள் மலையை ஒரு மிகச் சிறந்த சிற்பக்கூடமாக காட்சி அளிக்கிறது.

இந்த சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டிட அமைப்பு பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கிபி 768-800) உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

 குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார்கள் அது போல கழுகு மலையில் கீழே முருகன் குடைவரை கோயில் உள்ளது.

இந்த கழுகு மலையில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலில் ஒன்றாக இங்கு அமைந்துள்ள முருகன் கோயிலும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள  முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழின் மூலம் பாடியுள்ளார். இந்த திருத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி பார்த்தபடி காட்சி அளிக்கிறார். 

மேற்கு நோக்கி முருகன் அமைந்துள்ள மூன்று திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோயில் ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது.
இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார்.

வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம் #MadrasHighCourt

திருமணமாகாத ஆணும் பெண்ணும், ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 



கோயம்புத்தூரில் ஒரு தனியார் ஹோட்டல் ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இந்த தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டீல்கள் இருந்ததாலும் இந்த ஹோட்டல் போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரால் மூடப்பட்டது. இதனை எதிர்த்து அந்த ஹோட்டல் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “பத்திரிகைகளில் வெளியான செய்திகளை வைத்து இந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஹோட்டலில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவதால்  மூடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதால் என்ன தவறு இருக்கிறது. திருமணமாகாத ஆண் பெண் ஒரே அறையில் தங்கக் கூடாது என்ற சட்டம் ஒன்றும் இல்லை.

அதேபோல திருமணமாகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவித குற்றமும் இல்லை. அப்படி இருக்கும்போது ஆணும் பெண்ணும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கினால் எவ்வாறு குற்றமாகும். அத்துடன் இந்த விடுதியின் அறையில் மதுபாட்டீல்கள் கிடைத்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. 

மேலும் இந்த விடுதியை மூடும்போது உரிய நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஆகவே சீல் இடப்பட்ட இந்த விடுதியை ஆணை கிடைத்த 2 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவேண்டும்” என உத்தரவிட்டார்,

Wednesday, 4 December 2019

நீங்க பாசிட்டிவ்வா? நெகட்டிவா? இதெல்லாம் உங்களிடம் இருந்தால் தகர்த்தெரியுங்கள்..!

நம் அனுபவங்களை சீராக ஒழுங்கமைக்கும் தன்மை நம் உணர்வுகளுக்கு உண்டு என்று நம்புபவர்கள் நாம். 


இதிலிருக்கும் சிக்கலே , பெரும்பாலானோர் அதிகப்படியாக எதிர்மறையான எண்ணங்களை, அது எதிர்மறையான எண்ணம் என்ற விழிப்புணர்வே இன்றி வளர்த்து வருவது தான். இது ஒரு கட்டத்தில் எதிர்மறையாக இருப்பதே அவர்களின் இயல்பு என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.

வெற்றிக்கு இடையூறாக பல எதிர்மறை எண்ணங்கள் நமக்கு தெரியாமலேயே நம்மிடம் இருக்கலாம். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…இவற்றில் எதாவது, எப்போதாவது அல்லது எப்போதும் எழுகிறதா என ஆராய்ந்து பாருங்கள்  இருந்தால் தகர்த்தெரியுங்கள்…. ஆகாயம் தொடுங்கள்.. !!

#1 நீங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர் என நினைப்பது

உங்களுடைய தோல்விக்கும் சூழலுக்கும் அடுத்தவரை சாடுவதை நிறுத்துங்கள். நீங்கள் அடைந்திருக்கும் இடம் உங்களுக்கு விருப்பமானதாக இல்லாத வேளையில் அதை மாற்றும் முயற்சிகளை எடுங்கள். அதை விடுத்து இந்த விருப்பமற்ற இடத்திற்க்கு வழிநடத்தியவர்கள் இவர்கள் என மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதை நிறுத்துங்கள்.  உங்கள் வாழ்விற்க்கு உங்கள் பயணத்திற்க்கு நீங்கள், நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை மனமார நம்புங்கள்

#2 பிறரிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது

என்னதான் உங்கள் எதிர்பார்ப்பது அதீத நியாயமானதாக இருந்தாலும். “இவரால் இது நிகழ்ந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்ற எண்ணத்தை மட்டும் மனதில் விதைத்தால். பெரும்பாலும் அது ஏமாற்றத்தில் முடியும் வாய்ப்புகளே அதிகம். உங்கள் எதிர்பார்ப்புகள் பிறருக்கு முக்கியமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள்



 

#3 பிறரின் துணையோடே நம் வாழ்வு முழுமையடைகிறது என எண்ணுவது.

நம்மை தவிர வேறு எவராலும் நம்மை முழுமைப்படுத்த இயலாது. நண்பர்கள், குறிப்பிட்ட சில உறவுகள், என யாரோவொருவரால் நம் வாழ்வை முழுமை அடைய வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நம்மளவில் ஆனந்தமாக இருக்க கற்றுகொள்ளுங்கள் முடியாத வேளையில் அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்

#4 பணமும் இன்பமும் ஒன்றென நினைப்பது.

பணம் என்பது ஒருபோதும் வெற்றியின் அளவுகோல் ஆகாது. ஒரு சராசரி பணியாளர் அடையும் இன்பமும், ஆனந்தமும் பெரும் தொழில் முனைவோரிடம் இல்லாமல் போகலாம். நிச்சயம் பணம் பல பிரச்சனைகளை தீர்க்க வல்லது ஆனால் அது இன்பம் என்றாகிவிடாது. எனவே பணத்தை மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்க்குமான சமமான இணை என நினைப்பதை தவிருங்கள்

#5 வருங்காலத்தை நிர்மாணிப்பது கடந்த காலம் என எண்ணுவது.

உதாரணமாக ஓர் ஏழ்மை குடும்பத்தை பின்னனியாக கொண்டதனாலேயே ஏழ்மையாகவே வாழ்க்கை முடியும் என நம்புவது. சில சின்ன சறுக்கல்களை சந்தித்ததாலேயே எந்த துணிவான முடிவுகளையும் எடுக்காமல் தயங்குவது என வருங்காலத்தை கடந்த காலத்தின் நிகழ்வுகளாலேயே வடிவமைக்காதீர்கள். கடந்த காலத்தை எதனாலும் மாற்ற முடியாது. ஆனால் வருங்காலத்தை நிச்சயம் நாம் விரும்பும் மாற்றத்துடன் கட்டமைக்க முடியும். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே வருங்காலம் வசந்தம் தான்

தொல் தமிழரின் பானை கழிவறைகள்.

தமிழகத்தில் பொதுவில் மலம் கழிக்கும் அநாகரீக  வழக்கம் பெருவாரியாக இருக்கிறது என்று நம் மேல் ஒரு பழி உண்டு.
தமிழ் நாட்டில் முன்பு  தனிக்   கழிப்பறைகள் மலம் கழிக்க  உபயோகிக்கும் வழக்கம் இருந்ததில்லை என்று பொதுவாகக்கருதப்படுகிறது ஆனால் உண்மை முற்றிலும் வேறானது.
கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை
நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிவந்துள்ளனர்.  
சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பட்டினம் பகுதியின் வரலாறு 
அங்கு தொல்லியல் ஆய்வில் கிடைத்த பல்வேறு பொருட்களின் விவரங்களை 'பாமா'(PAMA) என்ற தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் செரியன் விளக்கமாக எடுத்துரைத்தார். 
 
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தமிழகம் என்பது பரந்துவிரிந்து, இன்றுள்ள தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்திருக்கும்
.  அதில் பட்டினம் நகரம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. இங்கு கழிவறைகள் இருந்ததற்கான சான்றாக கழிவுப் பானைகள் கிடைத்துள்ளன,''என்கிறார் பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தும் தொல்லியல் ஆய்வாளர் செரியன்.  
'ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்,''என்று விளக்கினார் செரியன். 
இதுவரை இங்கு நடக்கும் அகழாய்வில் தோண்டும் இடமெல்லாம் பானை ஓடுகளும் அதில் எழுத்துக்களையும் கண்டு வந்திருக்கிறோம்.
ஆனால்பானைகளின் மற்றொரு நவீன உபயோகமும் இப்போது தெரிய வந்திருக்கிறது .நம்முடைய நாகரீகத்தை பானை நாகரீகம் என்றே அழைக்கலாம் , பானை வழித்தடம் என்று பட்டு வழிப்போல சிறப்பித்துக்கூறுகிறார் சிறந்த ஆய்வாளரான
ஆர் பாலகிருஷ்ணன்.IAS. 
2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் பாமா நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது  ''பட்டினம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட
ஓடுகள் கிடைத்தன. இன்னமும் பல முக்கிய செய்திகள் அந்த அகழ்வாய்வில் வெளிவந்துள்ளது .இந்த செய்தி 
https://t.co/bhjGa1zdPt இல் வெளிவந்துள்ளது விரிவான பல செய்திகளை அதில் காணலாம்    .எப்படியெல்லாம் பீடுடன் வாழ்த்திருக்கிறோம் இப்போது எத்தனை அவப்பெயரை சுமந்து நிற்கிறோம் ! உலகின் தலை சிறந்த நகர நாகரீகம் கொண்டவர்களாக நாம் இருந்திருக்கிறோம் .
இப்போது சொல்வார் இல்லாமல் வாடி  நிற்கிறோம் !

Tuesday, 3 December 2019

ஒரு கோவில் - முதல்ல கங்கர்கள் பத்தாம் நூற்றாண்டில் கட்டியிருக்காங்க.அதற்கு அவர்கள் காலத்தில் அவர்களுடன் நட்பாக இருந்த சோழர்கள் விளக்கு எரிக்க தானம் கொடுத்திருக்காங்க.அதன் பின் குலோத்துங்க சோழர் தானம் கொடுத்திருக்கிறார்.அதன் பின்பு ஹொய்சாளர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் 


அவர்கள் சில மண்டபம் கட்டி விரிவு படுத்திருக்காங்க.அதன் பின்பு பதினான்காம் நூற்றாண்டில் வந்த விஜய நகர பேரரசை சார்ந்த மன்னர்களும் தங்கள் பங்குக்கு ஆன சில பணிகளை செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் வேலை செய்த கலைஞர்கள் அவர்களால் எவ்வளவு அதிகபட்சம் 

நேர்த்த்தியும் துல்லியமும் உழைப்பையும் கொட்டமுடியுமோ கொட்டியிருக்கிறார்கள்.

கருவறை முன்பு ஹொய்சாளர்கள் கட்டுமானத்தில் உருவான திருக்கல்யாண மண்டபத்தை கலையார்வம் உள்ள எவரும் கண்டவுடன் கடந்து வந்து விட முடியாது..ஆனால் அப்படி இரசிப்பவர் எவரும் அங்கு வருவதில்லை போல 

ஒவ்வொரு அரசாட்சியும் அதன் கலை வளர்ச்சியும் எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக இருக்கும் ஒரு கோவில்.வெறும் புத்தக வாசிப்பாக சோழர்கள் பற்றி அறிவதற்கும் கர்னாடகவின் தலைனகரின் அருகே கல்வெட்டு சான்றுகளோடு நின்று கொண்டிருக்கும்

கோவிலை தொட்டு தடவி உடல் சிலிர்ப்பதும் வெவ்வேறு விதமான அனுபவம்.

அந்த அனுபவத்தை நீங்களும் பெற சிக்பெலபுரா பயணப்படுங்கள்.

#சிக்பெலபுரா - கர்னாடகா

10th Century - Ganga Dynasty

#Chikbalapura - Karnataka - India

Monday, 2 December 2019

They might have never visited our temples ,Those who decided that there are only 7 wonders in the world.

They might have never visited our temples ,Those who decided that there are only 7 wonders in the world.
Ancient Indian architecture was one of the finest&accurate in the entire world.India's engineering techniques&skills that cannot be replicated, even today,in t 21st century.

 This beautiful cave has an engraved rock painting of Maa Durga in battle pose slaying demon Mahishasura!🙏😌

 This is in Mahabalipuram - 40-50 kms from main Chennai and 30-35 Kms from Chennai South (Sholinganallur Junction). U can easily reach Mahabalipuram via East Coast Road!

Friday, 29 November 2019

We are Hindu Temples and Dear Friends we r beyond the Ancient. 😊

We are Hindu Temples and Dear Friends we r beyond the Ancient. 😊 


Anjaneyadri Hill in hampi lies in this centre of Anegondi area, karnataka

Same temple different view 
Distant view 😄 

Tuesday, 26 November 2019

ஒரு புறம் தாளம், மறுபுறம் நாட்டியம் !

ஒரு புறம் தாளம், மறுபுறம் நாட்டியம் !

ஒரே கல் , ஓரே தூண் இது போன்றதொரு கலையை உலகிற்கு அளித்தது சநாதனம் எப்படியோ வாழ்வது அல்ல வாழ்க்கை இப்படி தான் வாழ்வது வாழ்க்கை என்று உலகிற்கு உனர்த்தியது சநாதனம்

one Side Musician , Another side Dancer Single Pillar

Lepakshi - 15th Century 

Saturday, 9 November 2019

அயோத்தி வழக்கின் பின்னணி..!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் போப்டே, சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்ச்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்தக் குழுவை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் சமரசப் பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 6ந் தேதி தொடங்கப்பட்டு தினசரி வாதங்கள் நடைபெற்றன. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 16ந் தேதியன்று நிறைவடைந்தன.

உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தக் குழுவின், சமரசப் பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளையும் தீர்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் அன்றைய தினம் தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று காலை அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.

Friday, 8 November 2019

#Breaking #அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு

#Breaking : அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு -நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

*"நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும்" - வழக்கு பட்டியல் அட்டவணை வெளியீடு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது 

*தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது
#SupremeCourt | #AyodhyCase

#AyodhyaCase

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...