Thursday 18 April 2019

Pushpagiri, Kadapa district AP.. a 7th CE temple complex houses both   Shiva and Vishnu.. by the banks of Pinakini (Penna)

Monday 1 April 2019

சைவ சித்தாந்தம் என்றைக்கு ஹிந்து மதமானது ? -

பதில்: சைவ சித்தாந்தம் என்றைக்கு ஹிந்து மதத்தை விட்டு பிரிந்திருந்தது ? தென்னிந்திய சைவ சமயம் இந்தியாவில் ஏனைய பகுதிகளில் நிலவிய சைவ சமயத்துடன் நெருங்கியும் உயிர்த் துடிப்புடனும் தொடர்பு கொண்டிருந்தது.

1/1 தஞ்சாவூர்க் கோயிலில் பூஜைகள் நடத்திய உடையார்,சர்வசிவ பண்டிதருக்கும்,ஆரிய தேசம்,மத்திய தேசம்,கௌட தேசம்  ஆகியவற்றில் வாழ்ந்த அவருடைய மாணவர்களுக்கும் , மாணவர்களுடைய மாணவர்களுக்கும் இராஜேந்திரன் I, ஆச்சாரிய போகமாக  ஆண்டுதோறும் ஏராளாமான தானியங்கள் கொடுத்துவந்ததே சான்று.



1/2 ஆதாரம் : SOUTH INDIAN INSCRIPTIONS ( எஸ் ஐ ஐ ii இந்துக்களின் விக்கிரகங்களைப் பற்றி " இந்து ஐக்னோகிராபி  " என்ற பெயரில் கோபிநாத் ராவ் எழுதிய நூலைப் பார்க்க   , ii , முன்னுரை ) Dear Mr. Seeman before attacking, please read the “Elements of #Hindu Iconography” by Gopinatha Rao




1/3 பிற்காலச் சோழர் ஆட்சியிலும் கூட வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இவ்வகைத் தொடர்பு நீடித்து வந்தது என்பது முதலாம் குலோத்துங்கன் ஆட்சிகாலத்து கல்வெட்டுக்களால் விளங்குகிறது. Kulottunga (I)  (1070 – 1122 AD) was an 11th-century monarch of the Chola Empire of South India.



1/4 ஓம்கார இராவலர்,1204 ல் செங்கற்பட்டு மாவட்டம் திருப்பாசூரிலுள்ள இறைவனுக்கு திருப்பவித்திரத்திற்குக் கட்டளை ஏற்படுத்தி எதோ பணம் கொடுத்தார். அந்த நன்கொடையாளர் , காசி ( வாரணாசி ) யிலுள்ள " லக்ஷத்த்யாய  இராவல சந்தானத்தின் "  ஞானசிவ இராவலரின் சீடர் என்று விவரிக்கப்பட்டிருக்கிறார். 



1/5 வாரணாசி பிஷா மடத்தைச் சேர்ந்த மற்றொரு இராவணன் , இதை விட மூன்றாண்டுகளுக்கு பிற்பட்ட ( தஞ்சை மாவட்டம் ) பந்தணை நல்லூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறார் .





1/6 "முதலாம் இராஜேந்திரன் , கங்கைக் கரையிலிருந்து சைவர் சிலரை அழைத்துவந்து சோழ நாடெங்கும் பல இடங்களில் அவர்களை இருக்கச் செய்தான் .

ஆதாரம் : ' ஜர்னல் ஆப் ஓரியண்டல் ரிசர்ச் ' , viii பக்கம் 200. Please see the Journal of Oriental Research, vii page 200 


1/7 இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்த சைவ சாதனங்களுக்கிடையே இடைவிடாத தொடர்பு நிலவியதற்கு இந்த மரபு சான்றாக இருக்கிறது. சோழர்கள் என்றில்லை பாண்டியர்கள், சேரர்கள், பல்லவர்கள் என்று பல்வேறு சான்றுகளை முன்வைக்கவும் நான் தயார் … அறிவார்ந்த தமிழ்ப்பிள்ளைகள் தாராளமாக வாதிட வரலாம்!


Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...