Tuesday 30 January 2018

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம்.
சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மீது படையெடுத்து வெற்றி கொண்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
மூன்றாம் இராசராசன் மகனான மூன்றாம் இராசேந்திரனையும் வென்று திறை செலுத்துமாறு ஆணையிட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
போசளர் கண்ணனூரினைத் (சமயபுரம்) தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னனான வீரசோமேசுவரன் என்பவனை தோற்கச்செய்து தண்ட நாயகன் சிங்கணனை கொன்று கண்ணனூரினை மீட்டான்.
கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் சேமன் என்பவனைக் கொன்றான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் களிறுகளைத் திறையாகக் கொடுத்தான் சோழ நாட்டின் ஒரு பகுதியினை ஆண்ட வீர ராமநாதன்.
இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று இலங்கையரசன் ஒருவனிடம் யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திறையாகப் பெற்றான்.
பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்
சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி ஆத்தூர் அருகில் உள்ள அகழியூர - அறகழூரினைத் தலைநகராக்கிப் பின் கொங்கு நாட்டினையும் கைப்பற்றி ஆட்சி புரிந்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.

சிதம்பரத்தில் தில்லையம்பதியில் உள்ள திருமால்,சிவன் கோயில்களிற்குத் துலாபார தானங்களை வழங்கினான். தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து,அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் சுந்தரபாண்டியன் கோபுரம் எனப் பெயர் பெற்றது.
திருவரங்கத்து திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை வேய்ந்து அக்கோயிலிலேயே முடிசூடியும் கொண்டான்.கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான்.இக்கோயிலில் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவனது பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவன் செய்த பணிகள் காரணமாக "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.இவனது படிமங்கள் பல பட்டப்பெயருடன் திருவரங்கத்திலும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன.திங்கள் தோறும் தனது பிறந்தநாளான மூலநாளில் விழா நடத்த ஏற்பாடு செய்யச்சொல்வானெனவும் சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்கா திருக்கோயிலில்,"சேரனை வென்றான்" என்ற பெயருடைய திருவிழாவொன்றை நடத்தி வைத்து மூன்று ஊர்களை நிவந்தமாக்கினான் என்பதும் வரலாறு.

தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் காஞ்சீபுர வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான்.காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் இவனைப் பற்றிய வாழ்த்துப்பா உள்ளது. அப்பாடலில்


"வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி

வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்

வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்

வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே"

கொங்குஈழம் கொண்டு கொடுவடுகு கோடுஅழித்து கங்கை இருகரையும் காவிரியும் கைகொண்டு வல்லாளனை வென்று காடவனைத் திறைகொண்டு தில்லை மாநகரில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்தருளிய கோச்சடை பன்மரான திரிபுவன்ச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்

உரை : விக்கிப்பீடியா
ஓவியம் : விஷ்ணு ராம்

Thursday 4 January 2018

இந்து சமயம் உருவான இடம்

*இந்துசமயம்_உருவான இடம் தமிழ்நாடு./தென்னாடு..*
***********************
#இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :
1.சைவம்
2.வைணவம்
3.கெளமாரம்
4.காணாபத்தியம்
5.செளரம்
6.சாக்தம்
7.ஸ்மார்த்தம்
#சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவ கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளன...!

#வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில்தான் உள்ளன...!

#கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன...!

#காணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் உள்ளன..!

#செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்...!

#சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள், அம்மன் கோவில்கள் என்று பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்...!

மேற்கண்ட ஏழுப்பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும் ஒட்டுமொத்த இந்துக்களான ஸ்மார்த்தர்கள் இருப்பதும்தமிழ்நாட்டில்தான்...

#பதினெட்டு சித்தர்கள் தோன்றி வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தது தமிழ்நாட்டில்தான்...!

ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றி வாழ்ந்து மறைந்தது தமிழ்நாட்டில்தான்.

பஞ்சபூத கோவில்களில் நிலம், நீர், ஆகாயம், நெருப்புக்கான தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

#நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில்தான். ..!

பன்னிரண்டு ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

சப்தவிடங்கத் தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

இந்துப் பண்பாட்டின் அடையாளமே தமிழ்நாடு தான் !!!!!

இந்துப் பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடுதான் !!!!!

இந்துப் பண்பாட்டின் மருத்துவமான இயற்கைச் சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான் !!!!

இந்துப் பண்பாட்டின் இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில்தான் !!!!

இப்பொழுது அனைவரும் புரிந்துணர்வு செய்து கொள்ளவேண்டியது :::

*தமிழ்நாடு திராவிட பூமியல்ல !!!!*
*தமிழ்நாடு தமிழ்தேசிய பூமியல்ல !!!!!*
*தமிழ்நாடு கம்யூனிச பூமியல்ல !!!*
*தமிழ்நாடு மாற்று மத பூமியல்ல !!!!*
*தமிழ்நாடு முழுக்க முழுக்க இந்து சமய பூமி !!!!*
*தென்னாடுடைய சிவனே போற்றி !*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!*
*ஓம் நமசிவாய...*

Wednesday 3 January 2018

சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- 1

சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்!

 எஸ்.ராஜகுமாரன்

"ஆட்டமுடன் பதினெட்டுச் சித்தரெல்லாம்

அஷ்டாங்க யோகத்தா லெட்டெட்டாகி

கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்

குவலயத்தி லிங்கமதாய் முளைத்தார்

பாரே!"

-போகர் - ஜெனனசாகரம் - 313

சித்தர்கள் அனைவரும் அட்டாங்க யோகத்தால் 'எட்டெட்டாகி' பல்வேறு சித்துகள் புரிந்து ஜீவசமாதியில் உலகெங்கும் லிங்கரூபமாக வீற்றிருக்கின்றனர்!

'ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை உச்சரித்தால், காலத்தை வென்று உடலை இறவாமை நிலையில் வைக்க முடியும். இந்த சிவநிலையை அடைய நமசிவாய மந்திரம் ஒன்றே வழி. காலத்தை வென்று சமாதிநிலையில் நிலைக்க ஒவ்வொருவரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்; தியானிக்க வேண்டும்.

Advertisement

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

15 நாள் டெங்கு சிகிச்சைக்கு 16 லட்சம் கட்டணமா?! - ‘முறைப்படுத்தவேண்டிய நேரம் இது!’ அறிவுறுத்தும் மருத்துவர்கள்

கார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு

சிவமகுடம்

'சித்தர்' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'நிறைவடைந்தவன்' என்று பொருள். ஆன்ம சுத்தியின் வழி மெய்யுணர்வின் உச்சத்தை அடைந்தவன், சீவனைச் சுத்தமாக்கி சிவத்தை அடைந்தவன் என்றும் கூறலாம். 'சிந்தை தெளிந்தார்' என்கிறது திருமந்திரம். 'நிறைமொழி மாந்தர்' என்கிறது திருக்குறள். 'சிந்தை தெளிந்திருப்பான் அவனே, அவனே சித்தன்' என்கிறது வால்மீகி ஞானம். 'அவன் சிவன் தெரிந்த ஞானி' என்கிறார் சிவவாக்கியர்.

இந்திய ஆன்மிக மரபில் சித்தர்களை நாதசித்தர், ரசசித்தர், மகேஸ்வர சித்தர், சங்கத சித்தர் என வகைப்படுத்துகின்றனர். ஹடயோகிகளின் முக்கிய நூலான 'ஹட யோக ப்ரதீபிகா'வில் சித்தர்களின் வரிசை ஆதி நாதரிலிருந்து தொடங்குகிறது ஆதிநாதர் என்பது சிவனின் ஆத்மானுபவநாமம். ஆதிநாதரின் மரபைச் சேர்ந்தவர்கள் நாதசித்தர்கள்.

ரசசித்தர்கள் மருத்துவர்கள். சங்கத சித்தர்கள் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்கள். தென்னிந்தியச் சித்தர்கள் மகேஸ்வரச் சித்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.


Advertisement

சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக ஆதிசித்தனாக விளங்குபவர் சிவபெருமான் என்பது மகேஸ்வரச்சித்தர்களின் சம்பிரதாயம். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவன் 'சித்தன்' என்றே அழைக்கப்படுகிறார். அந்த சிவத்தலமும் 'சித்தீச்சரம்' என்றே அழைக்கப்படுகிறது. சேலம் அருகே கஞ்சமலையில் உள்ள சிவன்கோயில் சித்தேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. சித்தர் காலாங்கி நாதரே அங்கு சிவனாக மாறியதாக ஐதீகம்.

தமிழ்நாட்டுச் சித்தர்களை மூன்று முக்கியப் பிரிவுகளாக ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். அவை கயிலாய வர்க்கம், பாலவர்க்கம், மூலவர்க்கம். கயிலாய வர்க்கத்தின் முதல் சித்தர் சிவன். பாலவர்க்கத்தின் முதல் சித்தர் முருகப்பெருமான். மூலவர்க்கத்தின் தலைச்சித்தர் திருமூலர்.

சித்தர்களின் வாழ்வு குறித்த முழுமையான வரலாற்றுத் தகவல்கள் மிகவும் சொற்பமாகவே கிடைத்துள்ளன. போகர் போன்ற சில சித்தர்களின் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகள் வழியாகவும் 'கர்ண பரம்பரைக் கதைகள்' எனப்படும் செவிவழிக் கதைகள் வழியாகவுமே அவர்களின் வரலாற்றை அணுக வேண்டியுள்ளது என்பது இதுவரையிலான சித்தர் ஆய்வுகளின் சாரம்.

இந்நிலைக்கு சித்தர்களே ஒருவகையில் காரணமாக அமைகின்றனர். ஆம்! மெய்யுணர்வின் தொடக்கம் தனக்குள்ளே முகிழ்ப்பதை உணரும் ஒரு சித்தன், முதலில் துறப்பது தனது பூர்வாஸ்ரமப் பெயரையும் பிறந்த இடத்தையும்தான். காடோடியாகவும், தேசாந்திரியாகவுமே எல்லா சித்தர்களும் வாழ்ந்திருக்கின்றனர்.

அவர்களின் பாடல்கள் எல்லாமே குறியீட்டு மொழியில் இயற்றப்பட்டுள்ளன. 'சூனிய சம்பாஷணை' என்றும் 'சந்தியா பாஷை' என்றும் இரட்டுற மொழி நடையிலேயே அவைகள் உள்ளன. மேலோட்டமான ஒரு வேடிக்கைப் பொருளும் - உள்ளார்ந்த நுட்பமான ஒரு தத்துவச் செய்தியாகவும் எல்லா சித்தர் பாடல்களும் அமைந்துள்ளன. அதைப்போலவே தங்களின் பெயர், ஊர், வாழ்க்கையை அவர்கள் மறைபொருளாகவே வைத்திருந்தனர்.

குரு சூட்டிய பெயர், அவர்களின் தோற்றத்தை வைத்து மக்கள் சூட்டிய பெயர், ஆன்ம அனுபூதியால் கிடைத்த பெயர் என்பவையே சித்தர்களின் பெயர்கள்.

குண்டலினி சக்தியை (குலா எனும் பாம்புச்சக்தி) மேலெழும்பச் செய்து சகஸ்ராரத்தில் உள்ள சிவத்துடன் இணையச் செய்பவர்கள், அதில் வழியும் அமிர்தத்தை உண்டு மரணமிலாப் பெருவாழ்வு எய்துவார்கள் என்பது மெய்யுணர்வுப் பயிற்சியின் உச்சநிலை. 'குலாமிர்தம்' என்னும் இந்த அமிர்தத்தை அடைபவர்களே சித்தர்கள் என்கிறது அஷ்டாங்க யோகம்.

இப்படி சித்தர்கள், சிவனை அடைந்து சிவனுடன் கலந்து உறையும் இடமே 'ஜீவசமாதி!' 'ஆதிக்குச் சமமாக ஆவது!' என்பதே சமாதி எனும் சொல்லுக்கு பதஞ்சலி முனிவரின் 'அஷ்டாங்க யோகம்' உரைக்கும் பொருள். அதாவது, பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்வை ஆகிய மூன்று நிலைகளின் ஐக்கியமே சமாதி!

இதன்படி ஒரு சித்தரானவர் தன் சமாதி நாளை முன் கூட்டியே அறிந்து கொள்கிறார். அதன்படியே அந்நாளில் அந்த இடத்தின் சமாதியில் தன் ஜீவனை உறையச் செய்கிறார்.

சாதாரண மனிதனுக்கு மலம், சிறுநீர், விந்து, நாதம் (ஆணின் உயிர்ச்சத்து - விந்து; பெண்ணின் உயிர்ச்சத்து - நாதம்) ஆகியவை வெளியேறி மரணம் சம்பவிக்கும். ஒரு யோகியின் மரணத்தில் இது நிகழாது. விந்துவாகிய உயிர்ச்சக்தி உச்சந்தலையில் உறைந்து விடும்! உடல் இயக்கமும் மன இயக்கமும் நின்றுவிடும்! பேராற்றல் வாய்ந்த அந்த சூக்கும தேகம் கண்ணுக்குத் தெரியாத உயிர்த்தன்மையுடன் காலகாலத்துக்கும் மண்ணில் உறைந்திருக்கும்!

மரணமிலாப் பெருவாழ்வை அடைந்த ஒரு சித்தர், தான் விரும்பிய காலம் வரை வாழவும், நினைத்த இடத்தில் சஞ்சரிக்கவும், வேறொரு இடத்தில் மறுசமாதி அடையவும், நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு என்னும் சராசரி மனித நிலைகளை வெல்லவும் முடியும்.

ஜீவ சமாதிக்குள் உறையும் சித்தர்களின் உடலை மண் அரிக்காது. உடலில் முடி வளரும், நகம் வளரும், உடல் சிதையும் நாற்றத்துக்குப் பதில் நறுமணம் கமழும் என யோக உபநிடதங்கள் கூறுகின்றன.

அருட்பேராற்றல் மையங்களாகவும் தியான பீடமாகவும் திகழ்ந்து, இறை அதிர்வுகளை வெளிப்படுத்தும் சித்தர்களின் ஜீவ சமாதிகள் ஆலயங்களுக்கு நிகரானவை.

மரபுத் தொடர்ச்சியாக மனிதர்களை வஞ்சிக்கும் ஊழ்வினைகள், கிரக தோஷங்கள், தீரா நோய்கள், ஜன்ம சாபங்கள் போன்ற தீவினைகளைத் தீர்க்கும் ஜீவாலயங்களாக ஜீவசமாதிகள் திகழ்கின்றன. இடையறாது மக்கள் வெள்ளம் அலைமோதும் திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, சதுரகிரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற இடங்கள் எல்லாம் சித்தர்களின் இறை அதிர்வு ஒளிரும் அற்புதங்களே! சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரத்யேகமான இறைச் சக்திகள் உண்டு!

மனம் லயித்து ஆன்ம உருக்கத்துடன் சித்தர்களின் ஜீவ சமாதிகளை தரிசித்து, அங்கு அமர்ந்து தியானித்து வழிபட்டால் நம்ப முடியாத மாற்றங்களும் வியப்பான ஏற்றங்களும் எல்லோர் வாழ்விலும் நடக்கும் என்பது அனுபவித்துத் திளைத்த ஆன்றோர் வாக்கு!

சித்தர்கள் சூக்கும உடலாக உறைந்திருக்கும் தமிழ்நாட்டின் அபூர்வமான ஜீவ சமாதிகளுக்கு இந்தத் தொடரின் வழியாக பயணிக்க இருக்கிறோம். அந்த இடங்களின் பேராற்றல், அற்புதங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை தொல்புராணத்தோடும் வரலாற்றோடும் கலந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

ஜீவ சமாதிகளைப் பற்றி இன்னும் சில ஆச்சர்யத் தகவல்களை உங்களுக்குச் சொல்லி விட்டு, பயணம் தொடங்க இருக்கிறோம். பயணம் என்பது ஆனந்த அனுபவம். ஆன்மிகப் பயணம் என்பது பேரானந்தம்! அதிலும் சித்தர்கள் தரிசனம் என்பது கூடுதல் பரவசம். வாருங்கள், சேர்ந்து பயணிப்போம்

`தமிழ் வேறு, இறைவன் வேறு இல்லை’ - திருமூலர் வாக்கு! சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள்! திருமூலர்.

`தமிழ் வேறு, இறைவன் வேறு இல்லை’ - திருமூலர் வாக்கு! சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!

(திருமந்திரம் - 270)

பொருள்:

அன்பும் சிவமும் வேறு வேறு என்போர் அறிவற்றவர்கள். இரண்டும் ஒன்று என்பதை எவரும் அறிவதில்லை. இரண்டும் ஒன்றென உணர்ந்து விட்டால் சிவனுடன் இயல்பாகக் கலந்து சிவமய மாவார்கள். இவ்வாறு பேரன்பு செலுத்தும் ஜீவாத்மாக்கள் சிவனுடன் ஒன்றி 'ஜீவனும் சிவனும் ஒன்றே' என்ற பெரும் பேறை அடைவார்கள்!

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் திருமூலர்! 

‘திட்டமிடும் இடங்களையெல்லாம் நம்மால் பார்த்துவிட முடிவதில்லை. எதிர் பாராத இடங்களையும் அனுபவங்களையும் பார்க்க நேரிடுகிறது' என்பதே அனுபவத்தின் பயணமொழி. குறிப்பாக ஆன்மிகப் பயணங்கள். தொடங்குவதோடு நின்று விடுகிறது திட்டங்கள். அதன் பிறகு கிடைப்பதெல்லாம் எதிர்பாராத அனுபவங்களே அதை உணர்வதே ஆன்மிகம் எனலாம்...

சித்தர் திருமூலரின் ஜீவசமாதிப் பயணமும் நமக்கு அப்படியே வாய்த்தது...

பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக உள்ளது, திருமூலர் அருளிய ‘திருமந்திரம்’. சித்தர் திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்து, மூவாயிரம் பாடல்களைப் பாடியதாக ஓர் ஐதீகம். சித்தர்களின் பாடல்களில் பல சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் கொண்டது 'தமிழ் மூவாயிரம்' எனப் போற்றப்படும் திருமந்திரம்!

கயிலையில் குருகுலவாசம் இருந்தவர் திருமூலர் என்று சொல்லப்படுகிறது. அங்கு திருமூலரோடு உடன்சாலை மாணாக்கராகப் பயின்றவர்கள் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சிவயோக மாமுனி, பதஞ்சலி முனிவர், வியாக்ரமர் என எண்மரைக் குறிக்கின்றனர்.

வடகயிலையில் குருகுலம் பயின்று முடித்த திருமூலர், தில்லையம்பதி என சைவம் போற்றும் சிதம்பரம் வந்து சேர்கிறார். பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அவருடன் வருகின்றனர். மூவரும் அங்கு செய்த தவத்தால் ஆடல்வல்லானின் அற்புத நடனக் காட்சியைக் கண்டுகளிக்கின்றனர்.

(திருமூலரின் பெருமைகளைக் கூறும் வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும் ..)

‘தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் ஏழுகோடி யுகம் இருந்தேனே'

எனத் தன் மூவாயிரத்தில் அக்காட்சி கண்ட விதத்தை திருமூலர் விவரிக்கிறார்.

அங்கிருந்து திருமூலர் சிவத்தல யாத்திரை மேற்கொள்கிறார். பொதிகைமலை நோக்கிப் போகும் திட்டத்துடன் பயணம் தொடர்கிறார்...

திருவாவடுதுறை செல்லும்போது மனதுக்குள் சிறு அசரீரியாய் 'திருவருள்' எதையோ உணர்த்த, அங்கேயே திருமந்திரத்தை அரங்கேற்றுகிறார்.

அதன் பிறகு அவரின் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள் முக்கியமானவை. அதற்கு முன் நம் பயணத்திட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்களைப் பார்ப்போம்.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை தமிழுக்கும், சைவத்துக்கும், சித்தர் உலகுக்கும் முச்சிறப்பாய் அளித்த திருமூலர், ஜீவ ஐக்கியம் பெற்ற ஸ்தலம் சிதம்பரம். அங்குள்ள ஆதிமூலர் சந்நிதியே அவர் 'ஒளி ஐக்கியம்' ஆன ஜீவ பீடம்!

திருமூலரின் மகிமை மிகுந்த இடம் காட்டுமன்னார் கோயில் அருகிலிருக்கும் திருநாரையூர். அங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் கோயிலில் திருமூலர் சந்நிதானம் என இவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

திருவாவடுதுறைக்கு அருகே ஆடுதுறையிலிருந்து சில கி. மீ தொலைவில் உள்ள ஊர் சாத்தனூர்.

மாடுமேய்க்கும் மூலன் என்பவனின் உடலுக்குள் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடமே சாத்தனூர். அங்கு திருமூலருக்குத் தனியே கோயிலுள்ளது.

திருமூலரின் இத்தனை மகிமை பொருந்திய இடங்களுக்குச் செல்ல முன்னேற்பாடுகள், திட்டங்கள் செய்தும் நாம் போக வாய்த்த திருவிடம் சாத்தனூர் திருமூலர் ஆலயமே!

‘நினைப்பது நாம் எனினும் தீர்மானிப்பது அவன்தானே' என்ற நிறைவுடன் சாத்தனூரை நோக்கிப் பயணித்தோம்.

ஆடுதுறையிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சிறுசாலையின் இருமருங்கிலும் அடர் மரங்கள். மழை பெய்து ஓய்ந்த ஈரமான மண் வாசனை, வழியெங்கும் மாடுகள் மேயும் காட்சிகள். மூலன் திருமூலராக மாறிய அந்த இடத்தில் பயணிக்கும்போது நமக்கு அந்தக் கதை நினைவில் எழுந்தது.

திருமூலரின் வரலாற்றைத் தெளிவாகக் கூறும் நூல் சேக்கிழாரின் பெரியபுராணம். அதில் இருபத்தெட்டு பாடல்களால் இவரின் வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ('புலவர் புராணம்' என்னும் நூலிலும் திருமூலரின் வரலாறு கூறப்பட்டுள்ளது.)

திருமூலர் திருக்கயிலை மலையில் வாழ்ந்திருந்தவர். சிவபக்தர். நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்றவர். சிறந்த சிவயோகி. வேத சாஸ்திரங்களில் தேர்ந்த ஞானி. அகத்தியரைச் சந்திக்கவும், சிவத்தலங்களை தரிசிக்கவும் தென்னாடு வந்தவர். தில்லையம்பதி சென்று பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோருடன் தவம் செய்தவர். அங்கு சிவபெருமானின் தாண்டவம் கண்ட பின் பொதிகை மலை புறப்படுகிறார். காவிரிக் கரையில் உள்ள சாத்தனூருக்கு வரும்போது, மேய்ச்சல் காட்டில் மாடுகள் ஓலக்குரல் எழுப்புவது கண்டு நிற்கிறார். அங்கு, மேய்ப்பன் மூலன் இறந்து கிடக்கிறான். அந்தத் துயர் பொறுக்க முடியாமலே மாடுகள் அழுகின்றன.

துன்பம் சகியாத அவர். தன் உடலை ஒரு மரத்தின் வேர்ப்பகுதியில் மறைத்து வைத்து விட்டு, மூலனின் உடலுக்குள் கூடுவிட்டு கூடு பாய்கிறார். கதறியழும் மாடுகள். உயிர்ப்பித்து எழுந்த மூலனைக் கண்டு மகிழ்ச்சியில் கத்துகின்றன!

மீண்டும் தன் உடலைத் தேடி அந்த மரத்தின் மறைவிடம் போகும்போது, அங்கு அவரின் உடலைக் காணவில்லை! ஈசனின் 'திருவிளையாடல்' அது என்பதை உணர்ந்தவர், திருவாவடுதுறையை அடைகிறார்.

அங்குள்ள அரசமரத்தின் கீழ் நிட்டையில் அமர்கிறார். சரியை முதலிய நால்நெறி உணர்த்தும் திருமந்திர மாலையினை ஆண்டுக்கு ஒரு பாடலென ஆக்கியருளினார்.

‘ஒன்றவன்தானே’ எனத் தொடங்கி மூவாயிரம் பாடல்களை யாத்தபின் மீண்டும் கயிலை சென்று ஈசனின் திருவடிகளில் சரணடைந்து இறுதிநிலை எய்தினார்.

வேறு சில சித்தர் பாடல்களில் இவரின் வாழ்வு பற்றிய மாறுபட்ட குறிப்புகளும் உள்ளன.

திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் என போகரின் சப்த காண்டத்தில் குறிப்புள்ளது. இவர் நந்தீஸ்வரரிடம் உபதேசம் பெற்றதும் முக்தி எய்தியதும் மூலநட்சத்திரம் எனவும் இந்நூல் குறிக்கின்றது.

சில சித்தர் பாடல்களில் இவர் வேளாளர் மரபு என்னும் குறிப்பு உள்ளது. சில பாடல்கள் ஆயர்குலத்தவர் எனக் குறிக்கின்றன.

ஓர் இளவயது அரசன் அகால மரணம் அடைவதால், அவன் மனைவியும் சுற்றத்தாரும் அழுது புலம்ப, திருமூலர் தன் உயிரை இறந்த அரசனின் உடலில் புகுத்தி எழுந்தார் என 'வைத்திய ரத்தினச் சுருக்கம்' என்னும் சித்தர் நூலில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது.

திருமூலரின் 'திருமந்திரம்' சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் என்னும் மூன்று பாயிரங்களையும் ஒன்பது தந்திரங்களையும் கொண்டுள்ளது. பாடல்களின் தொகை மூவாயிரம் எனச் சேக்கிழார் குறித்துள்ளார். எனினும் இராமலிங்க வள்ளலார் குருமந்திரப் பாடல் தொகை எட்டாயிரம் எனக் குறிப்பிடுகிறார். வேறு சில சித்தர் நூல்களிலும் இத்தொகைக் குறிப்பே காணப்படுகிறது.

தனித்துவமான கருத்துகளை, உட்பொருளைக் கொண்ட திருமந்திரத்தை சைவ சித்தாந்தத்தின் மூலம் எனச் சொல்லலாம். சைவ சித்தாந்தம் வரித்துக்கொண்ட சித்தர் நூல் என்றும் அதைக் குறிப்பிடலாம்.

திருமந்திரத்தின் முதல் பாடலே பொருட் செறிவு நிறைந்ததாகவும் சுவாரஸ்யமானதாகவும் அமைந்துள்ளது.

'ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்

சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே

(மந்திரம் - 1)

இப்பாடலை 'எண் குறி இலக்க மொழி' எனச் சித்தர் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் பொருள்.

'ஒன்று' என்பது முதலாகிய 'சிவம்!'

'இரண்டு' என்பது சிவத்தின் மறுபாதியாகிய ஆற்றல் 'சக்தி!'

'மூன்று' என்பது ஆன்மா, சிவம், சக்தி என்பதையும், ஆக்கல் (பிரம்மா)

காத்தல் (விஷ்ணு) அழித்தல் (ருத்ரன்) என்பதையும் குறிக்கின்றது.

'நான்கு' என்பது ரிக், யஜூர், சாமம், அதர்வணமாகிய சதுர்வேதங்களையோ அல்லது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நான்கு அனுபவ நிலைகளையோ குறிக்கிறது.

'ஐந்து' என்பது பஞ்சபூதங்களையும் ஐம்புலன்களையும் குறிக்கிறது.

'ஆறு' என்ற எண் குறிக்கும் பொருள் ஒன்றுக்கும் மேல் உள்ளது. ஆறு ஆகமச் சமயங்கள், ஆறு ஆதாரங்கள் மற்றும் வண்ணம், பதம், மந்திரம், கலை, புவனம், தத்துவம் ஆகிய அறுபெரும் விஷயங்கள்.

'ஏழு' ஏழாவது சக்கரமாகிய சகஸ்ராரம், ஏழு மேல் உலகங்கள். ஏழு கீழ் உலகங்கள்.

‘எட்டு’ என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், சிவன் ஆகிய எண் பெரும் சக்திகள்.

இறுதிச் சொல்லான 'உணர்ந்தெட்டே' என்பதற்கு, இவற்றை அனுபவத்தின் மூலம் அடையுங்கள் அல்லது உணருங்கள் என்று பொருள்! (ஒன்றானவன் உலகில் இரண்டானவன் என்ற பக்திப்பாடலுக்கு மூலமே திருமூலர்தான்!)

மந்திரங்கள், சமாதிக்கிரியைப் போன்ற நுட்பமான கருத்துகள் மட்டுமன்றி தமிழிலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பவையாக புகழ்பெற்றுள்ளன, சமூகக் கருத்துகள் கொண்ட பல திருமந்திரப் பாடல்கள்.

'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' (நான் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்!)

'யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே' (பிறர் மனம் புண்படாத இன்சொற்களைப் பேசுங்கள்!)

'அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே' (பேரன்பு காட்டும் ஜீவாத்மாக்கள் சிவனுடன் ஒன்றி விடுகின்றனர்.)

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' (மனித உடம்பு ஓர் ஆலயம். அதனுள்ளே இறைவன் உறையும் கருவறையே மனித உள்ளம்!)

'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' (மனிதர்கள் என்னும் ஒரே குலம்தான் உள்ளது! எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றே தெய்வம்!)

இவை 'திருமந்திரம்' என்னும் தீந்தமிழ்க் கடலின் ஒரு சில தேன்துளிகள்!

நாம் சாத்துனூரில் அமைந்துள்ள திருமூல நாயனார் கோயிலை அடைந்தோம். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள அந்தக் கோயில் கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

திருக்கயிலாய சிவயோகியார், இடையர் குல மூலனாக உருவெடுத்து, பின் சித்தர் 'திருமூலர்' ஆகி, தமிழுக்கும் சைவ சமயத்துக்கும், சித்தர் பிரபஞ்சத்துக்கும் அற்புதப் பொக்கிஷமாக அளித்த 'திருமந்திரம்' உருவாகக் காரணமான இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

ஊர் மக்களின் ஒற்றுமையில் எழுந்துள்ள அந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் திருமூலரை வழிபட்டு, அமர்ந்து கண்மூடி தியானிக்கும் போது சித்தர் ஜீவசமாதியின் மெல்லிய இறை அதிர்வுகளை நம்மால் உணரமுடிந்தது.

அங்கிருந்து திரும்பும்போது வழியில் ஒரு மேய்ச்சல் மைதானம். அதில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பரம்பொருளின் திருவிளையாடல் காட்சிகள் நம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன.

'கயிலாயத் தொருசித்தர் பொதியின் சேர்வார்

காவிரிசூழ் சாத்தனூர் கருதுமூலன்

பயிலாதோ யுடன்வீயத் துயரநீடும்

பசுக்களைக்கண் டவனுடலிற் பாய்ந்து போத

அயலாகப் பண்படையுடல் அருளால் மேவி

ஆவடுதண் துறையாண்டுக் கொருபாவாகக்

குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்

கோதிலா வடகயிலை குற்கினாரே'

என்னும் திருத்தொண்டர் புராணப் பாடல் மீண்டும் நம் நினைவில் புரண்டது. (முன் எழுதியுள்ள மூலன் திருமூலராக மாறிய கதையின் சுருக்கமே இப்பாடலின் பொருள்.)

'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்ன நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்னும் திருமந்திர வரிகளின்படி தமிழ் வேறு இறைவன் வேறு இல்லை என்பது உண்மைதானே?!

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...