Saturday 29 September 2018

pray

While my hands still have strength, I will raise them; while my lips still move, I will continue to pray; and while they give voice, I will always sing

Parantaka lost his son rajaditya in the battle - yaanailyil tunjiya devar (a later one would be rajendra's son). An addendum to a rashtrakuta inscription in atakur talks about treachery by the Ganga prince. Also some write up about a poison coated arrow (pic arakeswara temp)

பண்டைத்தமிழரின் கணித முறைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இருப்பது கணக்கதிகாரம் என்ற நூல்.

பண்டைத்தமிழரின் கணித முறைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இருப்பது கணக்கதிகாரம் என்ற நூல். காரிநாயனார் என்பவர் எழுதியது. பலாப்பழத்திலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் சூத்திரம் இதிலுள்ள ஒரு வெண்பாவில்தான் இருக்கிறது. அதிலிருந்து ஒரு பாடல், அளவைக் கணக்கைக் குறித்து

முப்பத்தி ரண்டு முழம்உளமுட் பனையைத்
தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச் – செப்பமுடன்
சாணேறி நாங்கு விரற்கழியும் என்பரே
நாணா தொருநாள் நகர்ந்து

32 முழம் உயரமுடைய பனைமரத்தில் ஒரு ஓணான் ஏறுகிறது. நாள் ஒன்றுக்கு சாண் ஏறி நான்கு விரல் இறங்குகிறது. மரம் முழுவதும் ஏற எத்தனை நாள் பிடிக்கும் ?

சாண், முழம் கணக்குத் தெரிந்தால் இதற்கான விடையைச் சொல்லிவிடலாம். இல்லையென்றால் ? விடைக்கான சூத்திரம் இதோ

பனையதனை இரட்டித்துப் பன்னிரண்டால் மாறி
இருநான் கீந்து கொள்.

பனையின் உயரத்தை இரட்டித்து, பன்னிரண்டால் பெருக்கி எட்டால் (2x4) வகுத்தால் விடை கிடைத்துவிடும். கண்டுபிடியுங்கள்

Monday 24 September 2018

BRAHMA from Carambolim (Goa)

Details of a finely carved Brahma from Carambolim(Goa), ~11th CE
See the ornate details of JataMukuta. Hairlocks form interlacing knot like pattern.
This is one of few fascinating Vigraha(s) which survived the onslaught of barbaric Portuguese Jesuits.

இந்து மதம் கூறும் மொழியின் நான்கு நிலைகள்

வார்த்தைகளின் ஒலி அமைப்பிற்கு சக்தி உண்டு என்று அறிந்த நம் முன்னோர்
மந்திரங்களையும், மறைகளையும் ஓத செய்தது  'சொல் ஒலி ஆக்க சக்தி' வழி நலம் பெறவே
இன்றய அறிவியலின் புரிதல் அதை அறிய தொடக்கி இருக்கிறது -- பாருங்கள் - கீழே உள்ள லிங்க் ல்.
ஒலியின் நான்கு நிலைகள் 
பரா
பச்யந்தி
மத்யமா
வைகரி
இவை ஒவ்வொன்றையும் பற்றிய ஆழ்ந்த வர்ணணைகள் எல்லாம் இந்து தர்மத்தின் சாஸ்திர ச்லோகங்களில் உண்டு.
அன்னை பராசக்தியே இவை அனைத்தின் ரூபமாகவும் இருக்கிறாள் என்று லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்கிறது
சீர்காழியில் ஞானசம்பந்த பெருமான் முதன் முதலில் ஐயனால் அருளப்பட்ட தங்க தாளங்களை தட்டி "மடையில் வாளை" எனும் பாடும் முன் அப் பொற்தாளங்களுக்கு ஓசை கொடுத்த எம்தாய் "ஓசை கொடுத்த நாயகியாக"சீர்காழி அருகே திருக்கோலக்காவில் வீற்று இன்றும் பேச்சு வராத குழந்தைகளுக்கு ஓசையை அருளி வருகிறாள்
இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தால், வைகரி என்பது ஓர் எண்ணம் வார்த்தைகளாக வெளிப்படும் நிலை, மத்யமா அதற்கு முன் அது மனதில் உள்ள நிலை, பச்யந்தி என்பது அதற்கும் முன் மனதில் தோன்றும் நிலை. இவை எல்லாவற்றுக்கும் முந்தைய ஆதார நிலை பரா என்பது. தமிழிலும் இது உண்டு...
தொல்காப்பியர் கூறுகிறார்
“எல்லா எழுத்தும் வெளிப்படக்கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை யறப நாடி
அளவிற் கோட லந்தணர் மறைத்தே”
இந்த நான்கு நிலைகளும் அந்தணர் மறையிலிருந்து அறியப்படவேண்டியவை என்கிறார்.
Letters=static=SIVAM
Sound=dynamic=SAKTHI.
Our divine mother "Osai koduththa Nayaki".
Her abode is "Thirukolakka" near Sirkazhi.
Still she blesses the stamaring childs and give fluent speach whose mothers prays before her.
இந்த லிங்க்கில் உள்ள வீடியோவை காணவும்.

Saturday 22 September 2018

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வயிற்றுக்குள் வளரும் சிசுவை கோயில் தூண்களில் வடித்த தமிழன்

ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லாத கற்காலத்தில் ...
வயிற்றுள் வளரும் சிசு எந்தெந்த கோணங்களில் இருக்குமென்று ... கண்டு உணர்ந்து அவற்றை கோவில் தூண்களில் வடித்த அக்கால விஞ்ஞானி யாரென தெரிய வில்லை .....

#குண்டடம்_கால_பைரவ_வடுக_நாத_சுவாமி ஆலய கல் தூணில் ....இடம் பெற்றுள்ள சிற்பங்கள் இவை....

அசல் உத்தர் போர்…… பாகிஸ்தான் பீரங்கிகளின் சுடுகாடு பற்றி தெரியுமா?

அசல் உத்தர் போர்
பாக் டாங்குகளின் சுடுகாடு பற்றி தெரியுமா?
அசல் உட்டர் போர்
1965 போரின் உச்ச நேரம். 1965 போரில் இந்தியப் படைகளின் வெற்றிக்கும், மொத்த போரின் போக்கையும் மாற்றிய இந்திய இராணுவ வரலாற்றின் மாபெரும் கவச வாகன யுத்தம் பற்றி தெரியுமா?

பாகிஸ்தான் தளபதி ஆயுப் கான் இந்தியாவில் உள்ள அம்ரிஸ்டரை கைப்பற்றி இந்திய படைகளுக்கு வரும் சப்ளையை தடை செய்து இந்தியப் படைகளுக்கு படுதோல்வி ஏற்படுத்திட ஒரு தந்திரத்தை கையாண்டார் அல்லது அப்படி நினைத்துக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்தார். அப்போது அவர் தாக்க நினைத்த இந்தியப் படை

காஷ்மீரில் நிலை கொண்டிருந்தது.
அந்த தாக்கும் திட்டம் பாகிஸ்தானின் முதல் தாக்கும் டிவிசனான ” பாகிஸ்தானின் பெருமை” ( ‘Pride Of Pakistan’) என்று அழைக்கப்பட்ட படைக்கு தெரிவிக்கப்பட்டு ,அவர்களை களமிறக்கியது.நன்றாக நிலைவில் கொள்ளுங்கள் இதன் குறிக்கோள் எதிர்பாராத நேரத்தில்    இந்தியப் படைகளை தாக்கி ,அந்த அதிர்ச்சியிலேயே இந்தியப் படைகளுக்கு சேதம் ஏற்படுத்தி சப்ளையை நிறுத்த வேண்டும் என்பதே.ஆனால் பாகிஸ்தானின் இந்த தாக்குதல் திட்டத்தை மிகக் கேவலமாக இந்திய இராணுவம் முறியடித்து, பாக் படைகளுக்கு கடும் சேதத்தை விதைத்தது இந்தியப் படைகள்.

அப்போது அமெரிக்காவின் உதவியுடன் உலகத்தின் மிகச் சிறந்த கவச வாகனமான பேட்டன் டேங்குகளை பாகிஸ்தான் கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவோ சீனப் போரில் கண்ட சோகமான முடிவுகளில் இருந்து தன்னை மீட்டு இராணுவத்தின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. இராணுவ சீரமைப்பு நடைபெற்று   கொண்டிருந்த காலம்.அன்று 8 டிசம்பர் 1965, பஞ்சாபில் உள்ள காம் கெரன் பகுதியை தாக்க பாகிஸ்தானின் 220 பேட்டன் டாங்குகள் புழுதியை கிளப்பி வந்துகொண்டிருந்தது.( 1 ஆர்மர்டு டிவிசன் மற்றும் 11வது இன்பான்ட்ரி டிவிசன்) காம் கெரன் பகுதியை பாக் படைகள் இந்திய எல்லையை ஊடுருவி வந்துகொண்டிருந்தனர்.

மறுபுறத்தில் இதை எதிர்க்க காத்திருந்த இந்தியப் படைகளுக்கு Lt. General ஹர்பக்ஸ் சிங் தலைமை தாங்கியிருந்தார். இந்தியாவை தாக்க வந்த பாக் வீரர்கள் பலத்திலும்,டாங்க் பலத்திலும் இந்தியாவை விட அதிக படைபலம் பெற்றிருந்தது.
முடிவு Lt. Singh கையில், ஒன்று பாக் படைகளை எதிர்த்து போரிட  வேண்டும் அல்லது படைகளை திரும்ப பெற வேண்டும். யோசித்தார். அந்த நேரத்தில் மேஜர் ஜெனரல குர்பக்ஸ் சிங் படைகளை பின்வாங்கி (4வது மலைதள பிரிவு) அசல் உத்தர் என்ற இடத்தில் குதிரை லாடம் அதாவது யூ வடிவத்தில் படைகளை நிறுத்த ஆணையிட்டார்.

  உண்மையில்   இந்த குதிரை லாடம் யுக்தி பிரைகேடியர் தியாகராஜ் அவர்களின் மூளையில் உதித்த யோசனை.ஆகட்டும் பார்த்துவிடலாம் என களத்தில் இறங்கினார்கள். பாக் படைகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியக் கிராமங்கள் வழியாக வந்து கொண்டிருந்தது. Lt.சிங் அவர்கள் படைகளை அசல் உட்டர்   என்ற கிராமத்தில் “யூ” வடிவத்தில் (U-shaped அதாவது ஒரு இடத்தை முற்றிலும் சுற்றி வளைக்காமல் அரை பிறை வடிவத்தில் நிற்பது) தனது படைகளை நிலை நிறுத்தினார். இதன் மூலம் பாக் படைகளை மூன்று பகுதிகளிலிருந்தும் தாக்கலாம்.
மேலும் ஒரு முக்கிய இராஜதந்திர முடிவையும் செய்தார்.

அந்த கிராமத்தை சுற்றிலும் கரும்பு வயல்கள் ஏராளம்.லெட்.சிங் அவர்கள் தண்ணீர் வரவழைத்து அந்த கரும்பு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி அந்த பகுதியை சேறாக மாற்றினார்.நமது வீரர்களை அந்த கரும்பு வயல்களுக்குள் நிற்க வைத்தார்.அதாவது அந்த கரும்பு வயல்களுக்குள் தான் நமது வீரர்களும்,
வெளியே டாங்குகளும் யூ வடிவத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்.நீண்ட கரும்பு பயிற்களுக்குள் நமது வீரர்கள் மறைந்து கொண்டனர்.

பாக் படை பரிவாரங்கள் அசல் உட்டர் கிராமத்தை நெருங்கின.பாக்கின் முதல் டிவிசன் , இந்தியப் படைகள் கண்ணில் படவில்லை பின் வாங்கிவிட்டனர் என நினைத்து  இந்தியப் படைகள் விரித்த வலையில் விழுந்தனர்.மூன்று பக்கம் இந்தியப் படைகள் இந்திய படைகள் மறைந்திருந்தது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.பாக் படைகள் சரியாக அந்த நான்காம் ( திசைகள் நான்கு என்பதை மனதில் கொள்ளுங்கள்) உள்ளே இறங்கின.

கடினமான எடை கொண்ட பாக்கின் பேட்டன் .டாங்குகளால் கரும்பு வயல்களில் சேற்றில் சிக்கி அவர்களால் நகரமுடியவில்லை. இந்தியப் படைகள் தாக்குதலை தொடுத்தனர்.மரண அடி. குறைந்த படைகளை வைத்தே பாக்கின் 200க்கும் மேற்பட்ட டாங்குகள் சிதறடிக்க தொடங்கியது இந்தியப் படைகள். பாக் படைகளின் மிக   அருகிலேயே கரும்பு வயல்களின் உதவியுடன் மறைந்திருந்தே இந்திய வீரர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். 220 பாக் டாங்குகளில் 170 டாங்குகள் அழிக்கப்பட்டன. பல டாங்குகளை கைவிட்டு பாக் வீரர்கள் ஓடினர்.11 டாங்குகள் கைப்பற்றப்பட்டன. இந்திய டாங்குகள் சேதம் அடைந்தன.10 டேங்குகள் இழப்பு.

பாக் கமாண்டர் மேஜர் ஜெனரல் நாசிர் அகமது கான் கொல்லப்பட்டார். பாக்கின் முதல் கவச வாகன பிரிவின் ஆர்டில்லரி பிரிவின் 16வது பீல்டு ரெஜிமென்டில் லூட்டினன்டாக இருந்த பர்வேஸ் முசரப் இந்த போரை பார்த்துக் கொண்டிருந்தார்.தனது படைகள் கேவலமாக தோற்கடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தார் .

இதே போரில் தான் அப்துல் ஹமீது அவர்கள் பரம் வீர் சக்ரா வென்றார்.
இந்தியப் படைகள் பெரும் வெற்றியை அடைந்தன. லெட் .சிங் அவர்களின் தந்திரம் மாபெரும் வெற்றியை தந்தது.அந்த இடத்திற்கு பேட்டன் டாங்குகளின் சுடுகாடு அல்லது பேட்டன் நகர் என பெயரிடப்பட்டது.

லெட்.சிங் அவர்களின் இந்த தந்திரம் பல நாடுகளால் அவர்களது இராணுவப் படைகளுக்கு இன்றும் கற்பிக்கப்படுகிறது.
இந்த போர் இரண்டாம் உலக போரில் நடைபெற்ற குர்ஸ்க் போருடன் ஒப்பிடப்படுகிறது.

Friday 21 September 2018

முருகன் கோயில்களை ஒருங்கிணைத்தால்......!


அரங்கனும் 7ம் எண்ணும்


அரங்கனும் 7ம் எண்ணும்
7 உலகங்களை உள்ளடக்கிய பொருளில் 7 மதில் சுற்றுக்களையும் "7 உலகங்கள்" என்று கூறுவர் 
 #ஸ்ரீரங்கம்


https://m.facebook.com/story.php?story_fbid=106584473643692&id=100028764180713


1 மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று "பூலோகம்" 
2 திரிவிக்ரம சோழன் சுற்று "புவர்லோகம்" 
3 அகளங்கனென்னும் கிளிச்சோழன் சுற்று "ஸுவர்லோகம்" 
4 திருமங்கைமன்னன் சுற்று "மஹர்லோகம்"
5 குலசேகரன் சுற்று "ஜநோலோகம்" 
6 ராஜ மஹேந்திர சோழன் சுற்று "தபோலோகம்" 
7 தர்ம வர்ம சோழன் சுற்று "ஸத்யலோகம்"

7 பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில் 
1 பெரியகோவில்  
2 பெரியபெருமாள் 
3 பெரியபிராட்டி 
4 பெரிய கருடன் 
5 பெரியவசரம் 
6 பெரியதிருமதில் 
7 பெரியகோபுரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மொத்தம் 7 நாச்சிமார்கள் 
1 ஸ்ரீதேவி 
2 பூதேவி 
3 துலுக்க நாச்சியார் 
4 சேரகுலவல்லி நாச்சியார் 
5 கமலவல்லி நாச்சியார் 
6 கோதை நாச்சியார் 
7 ரெங்கநாச்சியார் ஆகியோர்

PIC 2,3
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரைவாகனத்தில் எழுந்தருளுவார் 
(1) விருப்பன் திருநாள் 
(2) வசந்த உத்சவம் 
(3) விஜயதசமி 
(4)  வேடுபரி 
(5) பூபதி திருநாள் 
(6) பாரிவேட்டை 
(7) ஆதி பிரம்மோத்சவம்

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார் 
(1) சித்திரை 
(2) வைகாசி 
(3) ஆடி 
(4) புரட்டாசி 
(5) தை 
(6) மாசி 
(7) பங்குனி

ஸ்ரீரங்கம்  கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை  நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார் (1) சித்திரை 
(2) வைகாசி 
(3) ஆவணி 
(4)  ஐப்பசி 
(5) தை 
(6) மாசி 
(7) பங்குனி

PIC 4

ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார் 
(1) வசந்த உத்சவம் 
(2) சங்கராந்தி 
(3) பாரிவேட்டை 
(4) அத்யயநோத்சவம் 
(5) பவித்ரா உத்சவம் 
(6) உஞ்சல் உத்சவம் 
(7) கோடை உத்சவம்

PIC 5

ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும் 
1 பூச்சாண்டி சேவை
2 கற்பூர படியேற்ற சேவை
3 மோகினி அலங்காரம் ரத்னங்கி சேவை 
4  வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
5 உறையூர் ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
6 தாயார் திருவடி சேவை
7 ஜாலி சாலி அலங்காரம் 

PIC 6,7

திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார் 
(1) நவராத்ரி மண்டபம் 
(2) கருத்துரை மண்டபம் 
(3) சங்கராந்தி  மண்டபம் 
(4) பாரிவேட்டை மண்டபம் 
(5) சேஷராயர் மண்டபம் 
(6) சேர்த்தி  மண்டபம் 
(7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம் 

நம்பெருமாள் வருடத்தில் 3 முறை எழுந்தருளும் 7 வாஹனங்கள் 1 யானை - தை மாசி சித்திரை
2 தங்க கருடன் - தை பங்குனி சித்திரை
3 ஆளும் பல்லக்கு - தை பங்குனி சித்திரை
4 இரட்டை பிரபை - தை மாசி சித்திரை
5 சேஷன் - தை பங்குனி சித்திரை
6 ஹனுமந்த - தை மாசி சித்திரை
7 ஹம்ச - தை மாசி சித்திரை

ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

ராமபிரானால்  பூஜிக்கப்பட்ட பெருமை உடையவர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள்  அந்த ராமாவதாரம்  மகாவிஷ்ணுவின் 7வது அவதாரமாகும். இராப்பத்து உற்சவத்தின்  7ம் திருநாளன்று  நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்
(1) கோடை உத்சவம் 
(2) வசந்த உத்சவம் 
(3) ஜேஷ்டாபிஷேகம் திருப்பாவாடை 
(4) நவராத்ரி  
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம் 
(7) பங்குனி உத்திரம்

பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள் 
(1) பொய்கை ஆழ்வார்  பூதத்தாழ்வார் பேயாழ்வார் 
(2) நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மதுரகவி ஆழ்வார் 
(3) குலசேகர ஆழ்வார் 
(4) திருப்பாணாழ்வார் 
(5) தொண்டரடிபொடி ஆழ்வார் 
(6) திருமழிசை ஆழ்வார் 
(7) பெரியாழ்வார் ஆண்டாள்

PIC 8

திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது 
(1) ராமானுஜர் 
(2)  பிள்ளை லோகாச்சாரியார் 
(3) திருக்கச்சி நம்பி 
(4) கூரத்தாழ்வான் 
(5) வேதாந்த தேசிகர் 
(6) நாதமுனி 
(7) பெரியவாச்சான் பிள்ளை 

பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன 
1)  நாழிகேட்டான் கோபுரம் 
2) ஆர்யபடால் கோபுரம் 
3) கார்த்திகை கோபுரம் 
4) ரெங்கா ரெங்கா கோபுரம் 
5) தெற்கு கட்டை கோபுரம்-I 
6) தெற்கு கட்டை கோபுரம்-II 
7) ராஜகோபுரம்

PIC 9,10,11

சந்திர புஷ்கரிணியில் 1முறையும் கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக 7 முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்
1 விருப்பன் திருநாள் சித்திரை
2 வசந்த உற்சவம் வைகாசி


சந்திர புஷ்கரிணியில் 1முறையும் கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக 7 முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்
1 விருப்பன் திருநாள் சித்திரை
2 வசந்த உற்சவம் வைகாசி
3 பவித்ரோத்சவம் ஆவணி
4 ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி
5 அத்யயன உற்சவம் மார்கழி
6 பூபதி திருநாள் தை
7 பிரம்மோத்சவம் பங்குனி 

 
PIC 12,13

இவைகளை தவிர மற்ற கோவில்களில் காண முடியாதவை
1 தச மூர்த்தி
2 நெய் கிணறு
3 3 தாயார்கள் ஒரே சன்னதியில்
4 21 கோபுரங்கள்
5 நெற்களஞ்சியம்
6 தன்வந்தரி
7 4 திசைகளிலும் ராமர் சன்னதி இப்படியாக பல்வேறு சிறப்புகளை 7 ஏழாக தன்னுள்  கொண்டது பூலோக வைகுண்டமான திருஅரங்கம்(7) என்னும் #ஶ்ரீரங்கம் 

PIC 14,15

Structure of Srirangam Rajagopuram remained incomplete at the base for over 400 yrs. Started during the reign of Achyuta Deva Raya of Vijayanagar, the construction was given up after the king's death & apparently was not resumed owing to some political preoccupations or crisis.

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...