Tuesday 3 December 2019

ஒரு கோவில் - முதல்ல கங்கர்கள் பத்தாம் நூற்றாண்டில் கட்டியிருக்காங்க.அதற்கு அவர்கள் காலத்தில் அவர்களுடன் நட்பாக இருந்த சோழர்கள் விளக்கு எரிக்க தானம் கொடுத்திருக்காங்க.அதன் பின் குலோத்துங்க சோழர் தானம் கொடுத்திருக்கிறார்.அதன் பின்பு ஹொய்சாளர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் 


அவர்கள் சில மண்டபம் கட்டி விரிவு படுத்திருக்காங்க.அதன் பின்பு பதினான்காம் நூற்றாண்டில் வந்த விஜய நகர பேரரசை சார்ந்த மன்னர்களும் தங்கள் பங்குக்கு ஆன சில பணிகளை செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் வேலை செய்த கலைஞர்கள் அவர்களால் எவ்வளவு அதிகபட்சம் 

நேர்த்த்தியும் துல்லியமும் உழைப்பையும் கொட்டமுடியுமோ கொட்டியிருக்கிறார்கள்.

கருவறை முன்பு ஹொய்சாளர்கள் கட்டுமானத்தில் உருவான திருக்கல்யாண மண்டபத்தை கலையார்வம் உள்ள எவரும் கண்டவுடன் கடந்து வந்து விட முடியாது..ஆனால் அப்படி இரசிப்பவர் எவரும் அங்கு வருவதில்லை போல 

ஒவ்வொரு அரசாட்சியும் அதன் கலை வளர்ச்சியும் எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக இருக்கும் ஒரு கோவில்.வெறும் புத்தக வாசிப்பாக சோழர்கள் பற்றி அறிவதற்கும் கர்னாடகவின் தலைனகரின் அருகே கல்வெட்டு சான்றுகளோடு நின்று கொண்டிருக்கும்

கோவிலை தொட்டு தடவி உடல் சிலிர்ப்பதும் வெவ்வேறு விதமான அனுபவம்.

அந்த அனுபவத்தை நீங்களும் பெற சிக்பெலபுரா பயணப்படுங்கள்.

#சிக்பெலபுரா - கர்னாடகா

10th Century - Ganga Dynasty

#Chikbalapura - Karnataka - India

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...