Wednesday 21 November 2018

#விஷ்ணுவின் #10_அவதாரங்கள்_உணர்த்தும் #மனிதனின்_வாழ்க்கை

.

1.#மச்ச_அவதாரம் 🌳
      
தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

2.#கூர்ம_அவதாரம் 🌳

மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

3.#வராக_அவதாரம் 🌳

ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

4.#நரசிம்ம_அவதாரம் 🌳

எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

5.#வாமண_அவதாரம் 🌳

ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

6.#பரசுராம_அவதாரம் 🌳

வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

7.#ராம_அவதாரம் 🌳

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

8.#பலராம_அவதாரம் 🌳

இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9.#கிருஷ்ண_அவதாரம் 🌳

முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து
அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

10.#கல்கி_அவதாரம் 🌳

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

#ஓம்_நமோ_நாராயணா

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...