Thursday, 25 October 2018

சத்ரபதி சிவாஜி

நேரம் கிடைக்கும் போது நமது பிள்ளைகளுக்கு சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

1.  “காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது.

ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன ஆனால் !
இந்தியாவில் தான்  சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார் என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. அல்லாவே! எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய்.

இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான்.

அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு”

என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த “நமாஸ், பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கஸேப் படித்துள்ளார்.

2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்;

என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்” என்று #அபு_தாலிபன் அரசனான #ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.

3. என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை? என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் #பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.

4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “ உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க  ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.

5. சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம் என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்

6. சிவாஜி இன்னும் 10 ஆண்டு உயிரோடிருந்திருந்தால் நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது பிரிட்டிஷ் கவர்னர்

7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்” என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.

8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல;  இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி;

இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்” என ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.
பைரவி

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...